நாட்டிலேயே அதிவேகமான வளர்ச்சியைப் பெரும் விமான நிலையங்களில் திருச்சி முக்கிய இடத்தை பிடித்துள்ளதால், இங்கிருந்து பிற நாடுகளுக்கு விமானங்களை இயக்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே, திருச்சி விமான நிலையத்தை விரிவு படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஆண்டுக்கு 3.52 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில், சுமார் ரூ.920 கோடி செலவில் புதிய பயணிகள் முனையம், வான் போக்குவரத்து கட்டுப்பாடு அறை உள்ளிட்டவற்றை கொண்ட புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டம் திட்டமிடப்பட்டது. இதற்கான, உட்கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு பணிகள் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இஜிஐஎஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இப்பணிகள் ஏறக்குறைய முடிவுற்ற நிலையில், அது தொடர்பான விளக்கக்கூட்டம் திருச்சி விமான நிலைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், விமான நிலைய இயக்குநர் கே. குணசேகரன், புதிய முனைய திட்ட பொது மேலாளர் ஸ்ரீகிருஷ்ணா மற்றும் இஜிஐஎஸ் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர். இதுதவிர, வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவு, தொழில்நுட்பம், இமிக்ரேஷன், பொறியியல் உட்பட விமான நிலையத்தின் அனைத்துப் பிரிவு உயர் அலுவளர்கள், ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அவர்களுக்கு புதிய விமான நிலையத்தின் வடிவம், அதன் உட்பகுதியிலுள்ள வசதிகள் (ப்ளு பிரிண்ட்), குறித்து டி தொழில் நுட்பம் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது மேற்கொண்டு செய்ய வேண்டிய மாற்றங்கள், திருத்தங்கள் குறித்தும் அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, "விமான நிலைய புதிய முனையை வடிவமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. புதிய முனையம் கண் கவரும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இதிலுள்ள வசதிகள், வடிவமைப்பு முறைகள் குரிது அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதில், சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மண் வளம், சுற்றுச்சூழல் உட்பட அனைத்து வகையான் ஆய்வுகளும் முடிவடைந்த பிறகு, விரைவில் ( 2018 ஆம் ஆண்டில் ) புதிய முனையத்துக்கான பணிகள் தொடங்கும்" என்றனர்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.