ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிக்கும் பணி டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதோடு, பிரத்யேக மொபைல் ஆப் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதுபற்றி மத்திய சிறுபான்மையின நலத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:
ஹஜ் யாத்திரை விண்ணப்பங்கள் செயல்பாடு முதன் முறையாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கான ஒரு ஆரம்ப முயற்சியாகும். ஹஜ் பயணிகளுக்காக புதிய மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிப்பது, தகவல் பெறுவது, விசாரணை, இ-பேமென்ட், செய்திகள் உள்ளிட்டவை இந்த ஆப்பின் சிறப்பம்சமாகும்.
5 பெரியவர்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 7 பேர் குழுவாக விண்ணப்பிக்கலாம். அடுத்த ஹஜ் யாத்திரையின்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை எளிதாக்கவேண்டும் என்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே அடுத்த ஆண்டு அதிகமானோர் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என்றார்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.