அமீரக தேசிய வானிலை மைய அறிவித்தலின்படி, அமீரகத்தில் நிலவும் கடும் பனிப்படலாம் மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என அறிவித்துள்ளதை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதுடன் டிரைவர்கள் அதிக கவனத்துடன் இயங்குமாறும், கண்ணாடிகளை சுத்தமாவும், விளக்குகளை எரியவிட்டவாறு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
அமீரகத்தில் காலை வேளைகளில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சாலை போக்குவரத்தும் விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் அனைத்து விமான நிலைய தகவல்களும் தெரிவிக்கின்றன. ஒரு சில விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கும் தற்காலிகமாக திருப்பிவிடப்பட்டன.
பல விமானிகளுக்கு இதுபோன்ற கடும் பனிப்படல காலத்தில் விமானத்தை தரையிறக்கும் அனுபவமும் அதற்கான சிறப்பு லைசென்ஸ் இல்லாதவர்களும் திருப்பிவிடப்பட்டனர்.
சில எமிரேட்ஸ் விமானங்கள் பெட்ரோல் நிரப்புவதற்காக துபை வேல்டு சென்ட்ரல் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு மீண்டும் துபை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன.
துபையில் மட்டும் நேற்று அதிகாலை 4 மணிமுதல் 9 மணிமுதல் வரை 119 சிறு வாகன விபத்துக்கள் நடந்துள்ளன.
துபையில் மட்டும் நேற்று அதிகாலை 4 மணிமுதல் 9 மணிமுதல் வரை 119 சிறு வாகன விபத்துக்கள் நடந்துள்ளன.
மேலும் 1,892 பேர் தொலைபேசி வழியாக புகாரும் தெரிவித்துள்ளதாக துபை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
Source: Gulf News
Source: Gulf News
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.