

மஜக , திமுக , SDPI , நாம் தமிழர் , விசிக , முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள் .
SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் .மறுமலர்ச்சி திமுக சார்பில் நானும் அண்ணன் தாயகம் சுரேஷ் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினோம் .
பொது சிவில் சட்டம் என்பது சாத்தியமற்ற ஒன்று . அனைவருக்கும் ஒரே சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் அல்ல சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க வேண்டும் என்பது தான்

தாலி கட்டிய மனைவியை மறைத்து திருமணமே ஆகவில்லை என்று சொன்ன மோடி முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்படுவதாக நீலி கண்ணீர் வடிக்கிறார் என்று பாஜகவின் கோர முகத்தை தோலுரித்து பேசினேன் .
என்னோடு அண்ணன் ருத்ரமூர்த்தி , நண்பர்கள் செந்தில் , பெர்லின் உள்ளிட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டனர் .
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இதே பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முனைந்த போது ஆரம்ப நிலையிலேயே மதிமுக எதிர்த்தது அந்த நிலைப்பாட்டில் இப்போது வரை எந்த மாற்றமுமில்லை .
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.