உண்மையில் பாரட்டக்கூடிய மனிதரே இவர்...
திருச்சி ஜங்சன் பள்ளிவாசலில் அஸர் தொழுது முடித்துவிட்டு வெளியில் வந்தபொழுது...
என்னோடு தொழுதுவிட்டு கையில் ஒரு Stick வைய்த்து கொண்டு ஒரு அழகான நபர் துணையில்லாம் பாதையரியாமல் நடந்தார்
நான் அவர் கையை பிடுத்து ஸலாம் சொல்லிவிட்டு ஜீ நீங்க எங்க போகனும் நா கொண்டு போய் விடுறேன் சொல்லுங்க. என்றேன்...
புன்சிரிப்போடு என் கையை பிடித்து நடந்து கொண்டே பேசத்தொடங்கினார்...
என்னைபற்றி விசாரித்து முடித்ததும்
நீங்க என்ன செய்றீங்க ஜீ...
அவர்; நான் இரயில்வே ஆஃபிஸராக பணிபுரிகிறேன் என்று சொல்ல தொடங்கி.
அல்லாஹ் என் கண்ணை என்னிடமிருந்து பரித்தாலும்.
நான் அது மறுமை நலவுக்கே என புரிந்து...
நன்றாக படித்து நல்ல வேலையை அடைந்தேன்...
தொழுகையையும் அந்த அந்த நேரத்தில் தொழுது விடுவேன் என்று கூறும் போது..
என் மனது என்னியது அல்லாஹ் இம்மனிதரிடமிருந்து கண்ணை பறித்த போதிலும் நன்றி செலுத்துகிறாறே...
அல்லாஹ் கண்களை கொடுத்தும் நன்றி செலுத்தாத மனிதர்களை என்ன சொல்ல....
என்று நினைத்தபடிய அவர் சேருமிடத்தில் விட்டு நகர்ந்தேன்.
நன்றி : முக நூல் நண்பர்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.