சவுதி அரேபிய மன்னர் சல்மான் பெயரில் இயங்கும் தொண்டு நிறுவனம் ஏமன் அகதிகளுக்கான உதவிகளை செய்தது. முதல் கட்டமாக 50000 உணவு பொட்டலங்களும் 40000 பிரட் பாக்கெட்டுகளும் நூற்றுக்கும் அதிகமான தண்ணீர் பாட்டில்களும் மற்றும் சில அத்தியாவசியப் பொருட்களும் மனிதாபிமான முறையில் வழங்கப்பட்டன.
சவுதி ஏமன் பார்டரில் உள்ள அல் வதீயா செக் பாயிண்டில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கே இந்த நிவாரணப் பணிகள் வழங்கப்பட்டன. இந்த நிவாரணப் பணியானது ஏமனில் நிலைமை சீராகும் வரை தொடர்ந்து நடைபெறும் என்று இதற்கான பொறுப்பதிகாரி ரஃபா அல் சபா தெரிவித்தார்.
தகவல் உதவி
அரப் நியூஸ்
20-06-2015
Posted by சுவனப் பிரியன்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.